ஆசிய பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து!

Update: 2022-04-30 01:58 GMT

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னேறி வருகின்றார். அதே போன்று நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யு யான் யாஸ்லினை வீழ்த்தி காலிறுதி தகுதிப்பெற்றிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து, சீனா நாட்டை சேர்ந்த ஹி பிங் ஜியாவோவுடன் மோதினார். இப்போட்டியில் முதல் செட்டை 219 கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார். அதன் பின்னர் சீனா வீராங்கனை ஹி பிங் ஜியாவோ இரண்டாவது செட்டை 13-21 என்று கைப்பற்றினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 3வது செட்டில் சிறப்புடன் விளையாடி சிந்து 21-19 என கைப்பற்றினார். இதனால் 21-9, 13-21, 21-19 என்கின்ற செட் கணக்கில் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி பி.வி.சிந்து தற்போது அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Source: Maalaimalar

Image Courtesy: Mint

Tags:    

Similar News