ஐ.பி.எல். போட்டியில் அஸ்வின் புதிய சாதனை!

Update: 2022-04-27 13:47 GMT

ஐ.பி.எல். போட்டியில் நேற்று (ஏப்ரல் 27) நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதலிடத்திற்கு வந்தது.

புனேயில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால் அந்த அணி 29 ரன்களை தோற்றது. இதில் கேப்டன் டுபெலிசிஸ் 23 ரன் எடுத்தார். குல்தீப்சென் 4 விக்கெட்டும், தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டும் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதற்கிடையில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் சுழற்பந்து வீரர் அஸ்வின் ஐ.பிஎல். போட்டியில் 150 விக்கெட்டை தொட்டு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Source: Malaimalar

Image Courtesy:Rediffmail

Tags:    

Similar News