விம்பிள்டன் டென்னிஸ்: போட்டியில் இருந்து விலகினார் நடால்!

Update: 2022-07-08 11:11 GMT

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விள்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரர் ரபேல் நடால் ஸ்பெயின், அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்கின்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

அப்போது இந்த போட்டியின்போது நடாலுக்கு திடீரென்று வயிற்று வலியால் அவதியுற்றார். அதன் பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 8) நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் விளையாட இருந்த நிலையில், அரையிறுதியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் திடீரென்று அறிவித்துள்ளார். அவருக்கு வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News