ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை வெளியிட்டார் ரெய்னா!

ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை வெளியிட்டார் ரெய்னா!

Update: 2021-01-03 13:17 GMT

கடந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக சென்னை அணியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுரேஷ் ரெய்னா முதன்முறையாக வாய் திறந்துள்ளார். முன்னாள் கேப்டன் தோனியின் மிக நெருங்கிய நண்பராக அறியப்பட்ட சுரேஷ் ரெய்னாவிற்கு, தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் படையே உண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் சின்ன தல என்ற செல்ல பட்டத்தையும் பெற்ற சுரேஷ் ரெய்னா, தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் தானும் தானாக முன்வந்து ஓய்வை அறிவித்தார்.

தோனிக்கு உறுதுணையாக இருந்ததன் மூலம், ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற சுரேஷ் ரெய்னா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அந்த மதிப்பையும் இழந்தார். தோனிக்கு கொடுக்கப்பட்டதை போன்றே தனக்கும் அறை வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா அடம்பிடித்ததன் காரணமாகவே சென்னை அணியில் இருந்து விலக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானதால் பெரும்பாலான ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவை கடுமையாக விமர்சித்தனர்.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியிலும் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “அந்த சூழ்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் இருப்பதே சரியென நினைத்தேன். எனது குடும்பம் ஒரு பெரும் இழப்பை சந்தித்திருந்தது, அந்த தருணத்தில் நான் குடும்பத்தினருடன் இல்லாமல் கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல என்று முடிவெடுத்தேன் எனது மனைவியும் நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். என் குடும்பத்தினருக்காக நான் திடீரென விலகி நாடு திரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News