இதனால்தான் எனக்கு மரியாதை கிடைக்கிறது.. மனம் திறந்த கொல்கத்தா வீரர்..

5 சிக்ஸர்களை நான் அடித்த பிறகு தான் எனக்கு மரியாதை கிடைக்கிறது என்று கூறிய கொல்கத்தா வீரர்.

Update: 2023-05-23 02:00 GMT

குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தின் போது கொல்கத்தா அணி வீரர் அபாரமான ஸ்டேடியத்தில் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டி இருக்கிறார். குறிப்பாக குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் ஐந்து சிக்ஸர்கள் அடித்த பிறகு தனக்கு தற்போது அதிகம் மரியாதை கிடைப்பதாகவும் கொல்கத்தா அணி வீர ரிங்கு சிங் கூறியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பான ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா அணியில் அதிக ரன்கள் குவித்த இளம் வீரராக 25 வயதான ரிங்கு சிங் தற்பொழுது அதிகமான சிக்ஸர்களை அடித்து கொல்கத்தா அணிக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்து இருக்கிறார்.


இவர் நான்கு அரை சதம் உட்பட 29 சிக்ஸர்கள் மற்றும் 474 ரன்கள் எடுத்து இருக்கிறார். இது பற்றி இவர் கூறுகையில் இது போன்ற சீசன் அமையும் எந்த வீரருக்கும் சிறப்பானதாக சிறப்பானதாக தான் இருக்கும். இதனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று நினைக்க நான் விரும்பவில்லை. இனி வழக்கமான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வேன். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது ரன் குறிப்பை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.


அடுத்த ஆண்டு உண்மையிலேயே இதைவிட அதிகமான திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கிறது. ஐந்து சிக்ஸர்கள் அடித்த பிறகு தான் எனக்கு தற்பொழுது நிறைய மரியாதை கிடைக்கிறது. நான் யார் என்பதை பலர் அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் இது என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்" என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News