ஐத்ராபாத் அணிக்கு எதிரான தோல்வி இந்த சீசனில் அணியின் மோசமான தோல்வி என ரோஹித் சர்மா விளக்கம்.!
ஐத்ராபாத் அணிக்கு எதிரான தோல்வி இந்த சீசனில் அணியின் மோசமான தோல்வி என ரோஹித் சர்மா விளக்கம்.!
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ஐத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் அணியை பொருத்தவரையில் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் செல்ல முடியும் என்பதால் இந்த போட்டியை வெற்றே தீர வேண்டும் என களம் இறங்கியது. அதே போல் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய மும்பை அணியை திணர செய்தது ஐத்ராபாத் அணி. சந்திப் சர்மா ஹோல்டர் போன்ற வீரர்கள் சிறப்பான பந்து வீச்சின் மூலம் மும்பை அணியை தடுமாற செய்ய 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. மும்பை இன்டியன்ஸ் அணியில் அதிகபட்சமாக பெல்லார்ட் 41 மற்றும் சூரியக்குமார் 36 ரன்கள் அடிக்க 149 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் அடித்து அசத்தியது. வார்னர் மற்றும் சாஹா அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தி இருவரும் அரை சதம் வீளாசினர். இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இந்த நாளை நாங்கள் நினைவில் வைக்க விரும்பவில்லை. இந்தத் தொடரின் மிக மோசமான செயல்பாடு இந்தப்போட்டியில் தான் வந்துள்ளது. இந்த போட்டியில் சில முயற்சிகளை நாங்கள் செய்ய நினைத்தோம். ஆனால் அது எங்கள் வழியில் வரவில்லை. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இன்று நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் மீண்டும் விளையாட வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் நான் சில போட்டிகளை விளையாட இருக்கிறேன். அதற்கப்புறம் காயத்தின் தன்மை குறித்து பார்க்கலாம். எப்பொழுதும் கடந்த போட்டியை பற்றி நினைக்காமல் அடுத்து வர இருக்கும் போட்டிக்காக போகஸ் உடன் இருக்க வேண்டும். டெல்லி சிறப்பான அணி அவர்களை எதிர்கொள்வது ஒரு சிறந்த சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.