20 ஓவர் உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் பெயர் பரிசீலிக்கப்படும்!

Update: 2022-02-24 08:11 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு நான் சொல்வது ஒன்று மட்டுமே.

அதிகளவு ரன்களை குவியுங்கள். எனவே வாய்ப்புகள் தானாக தேடி வரும். அதிலும் ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கின்றனர்.

மேலும், தேசிய அணியில் வாய்ப்பு இல்லையே என்று கவலைப்படுதை விட்டுவிடுங்கள். ரன்களை குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். அதிலும் சஞ்சு சாம்சன் மிகவும் திறமையானவர். அவர் அனைத்து போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். வரும் காலங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News