வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. புது பார்மில் கேப்டன் ரோகித் சர்மா...

Update: 2023-07-06 05:29 GMT

உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை நழுவ விட்ட இந்திய அணியின் கேப்டனை பெரும்பாலும் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்தார்கள். குறிப்பாக கேப்டன் பதவியில் இருந்து ரோகித் ஷர்மாவை நீக்க வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சைகளும் பெருமளவில் இருந்து வந்தது. அதிலிருந்து தற்போது ரோகித் சர்மாவின் மாஸ்டர் பிளான் வேற லெவலில் இருந்து வருகிறது. தான் எப்படி காத்து கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று திறமை அவருக்குள் இருக்கிறது.


எனினும் தோனி மாடலை பின்பற்றி ரோகித் சர்மா கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. "எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற தலைவர் பாணியில் மீண்டும் அதிரடியான ஆட்டங்களை கொடுக்க ரோகித் சர்மா காத்துக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கேப்டன் தோனி அவர்களும் இருந்து இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மையில் உலகக் கோப்பையை தோனி வென்ற பிறகு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.


இங்கிலாந்தில் தொடர்ந்து 4 டெஸ்டில் தோல்வி, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 4 டெஸ்டில் தோல்வி என இந்திய அணி அடி பாதாளத்திற்கு சென்றது. அப்போது தோனியை கேப்டன் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று அப்போதைய தேர்வு குழு தலைவராக இருந்த ஸ்ரீகாந்த் முடிவெடுத்தார். இதன் மூலம் தோனி தன்னுடைய கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொண்டார். அதேபோல தான் தற்போது ரோஹித் சர்மாவும் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள இருக்கிறார்.

Input & image courtesy: News

Tags:    

Similar News