டி20 தொடரிலிருந்து ருதுராஜ் விலகியது ஏன்!

Update: 2022-02-26 12:09 GMT

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 தொடர் இன்று தர்மசாலாவில் 7 மணிக்கு நடைபெறுகிறது. இத்தொடரிலில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென்று நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் சாதனை படைக்கும் வீரர்கள், இந்திய அணியில் அண்மைக்காலமாக இணைந்து வருகின்றனர். அவர்களுக்காகன ஒரு வாய்ப்பையும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்படுத்திக்கொடுக்கிறது.

அதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான் ருதுராஜ் கெய்க்வாட், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனிடையே லக்னோவில் நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் விளையாடவில்லை. மேலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து ருதுராஜ் வெளியேறியுள்ளார். அவர் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு அனுப்பப்பட இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News