ஒரு நாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவு!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 19) நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Update: 2022-01-19 09:49 GMT

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 19) நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதனிடையே காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பும்ரா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இன்றைய அணியில் கே.எல்.ராகுல், தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவிந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகிய வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News