விராட் கோலி இடத்திற்கு வந்த புதிய ஆபத்து: இனி என்னவாகும்?

இந்திய விளையாட்டு வீரர் விராட் கோலிக்கு வந்த புதிய ஆபத்து என்ன?

Update: 2022-12-30 01:55 GMT

இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பி.சி.சி.ஐ அதிரடி மாற்றங்களை தற்போது கொண்டு வந்து இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து சாகர் தவான் அதிரடியாக தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து துணை கேப்டன் பதவியில் இருந்த ராகுல் நீக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் இலங்கை தொடரில் விளையாட போவதில்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


இந்திய அணி தேர்வு குறித்து தெரிவித்துக் கொள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் இந்தியா புதிய மாற்றத்தை சந்தித்திருப்பதாக கூறி இருக்கிறார். சாகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருடைய வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் தனது இடத்தை இழந்தார். இப்பொழுது அதைத் தாண்டி ஒரு நாள் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட இருப்பதாக குறிப்பிட்டார். ஏதேனும் ஒரு இன்னிங்ஸ் நன்றாக விளையாடு வந்தார். ஆனால் இப்பொழுது சில போட்டிகளில் சேர்க்கவில்லை என்றால், உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.


டி20 போட்டியில் விராட் கோலியின் இடத்திற்கு தற்போது ஆபத்து வந்து இருக்கிறது. 50 ஒவ்வொரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தான் அதிகம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டிகளில் விராட் கோலி நிச்சயமாக ஆடுவார். ஆனால் இந்த ஆண்டு விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News