நெஞ்சு வலியால் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி.!

நெஞ்சு வலியால் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி.!

Update: 2021-01-02 16:39 GMT

பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், சவுரவ் கங்குலி தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பாக குவியத் தொடங்கியதால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. 
 

Similar News