ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? நாக்பூரில் 2வது 20 ஓவர் போட்டி!

இரண்டாவது 20 ஓவர் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற இருக்கிறது.

Update: 2022-09-24 02:31 GMT

ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இன்று களம் இறங்குகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று உள்ளது. மெகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் ஒன்று- ஜீரோ என்ற இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்க இருக்கிறது.


தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற முடிய வில்லை. ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ஆனால் பந்துவீச்சு தான் ஒட்டுமொத்தமாக சரியாக இல்லை. குறிப்பாக வேகப்பந்து பேச்சாளர் புவனேஷ் இறுதிக்கட்டத்தில் ரண்களின் வாரி வழங்கியது தோல்விக்கு வித்திட்டது.இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று நம்பலாம். சூரியகுமார் யாதவ் அளித்த பேட்டியில், உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார் என்றார். இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் களம் காணவர் என்று தெரிகிறது.


சிலர் பந்துவீச்சாளர் யூஸ்வேதா சாகல் ஆசிய கோப்பை கிரிக்கெட் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ந்து சரியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்கு இடைவிடாது வாழ்த்துக்கள் வழங்கப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவாரா? என்பது போட்டிக்கும் முன்பாக தான் தெரியும். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News