கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் ரத்து.!

கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் ரத்து.!

Update: 2020-12-10 15:25 GMT

இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலில் நடைபெற்ற மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணியை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியது.

அதன் பின்னர் நடைபெற இருந்த மூன்று ஒரு நாள் போட்டக கொண்ட தொடர் தென் ஆப்ரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட முதல் ஒரு நாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கிருந்த ஹோட்லில் கொரோனா பாதிப்பு எற்பட்டதால் அச்சம் காரணமாக இரண்டாவது போட்டி மற்றும் தொடரையை கைவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பரிக்கா அணிகள் அடுத்த தொடருக்கு தயார் ஆகி வருகின்றனர். இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்கா தொடர் முடிவடைந்த நிலையில் ஜனவரியில் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதே போல் தென் ஆப்பரிக்கா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

Similar News