ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொல்கத்தா அணியில் இணைந்த ஷகிப் அல் ஹாசன்.!

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொல்கத்தா அணியில் இணைந்த ஷகிப் அல் ஹாசன்.!

Update: 2021-02-20 19:11 GMT

ஐபிஎல் 14வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 8 ஐபிஎல் அணிகளும் பங்கேற்றனர். இந்த ஏலத்தில் மொத்தமாக 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏலத்தில் கலந்து கொண்டு நிலையில் 57 வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்தது.

இதில் 22 வெளிநாட்டு வீரர்களும் 35 இந்திய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கம்பீர் தலைமையில் விளையாடிய ஷகிப் அல் ஹாசனை மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 3.5 கோடிக்கு ஹகிப் அல் ஹாசன் கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்க பல ஆண்டுகள் பின்னர் மீண்டும் கொல்கத்தா அணிக்கு ஹகிப் அல் ஹாசன் விளையாட உள்ளார்.அவரை தொடர்ந்து ஜாக்சன், ஆரோரா, கருண் நாயர் போன்ற இந்திய வீரர்களை தேர்வு செய்து ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி.

ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் பென் கட்டிங்க்-ஐ கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்க அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேற்றபட்ட ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பவண் நேகியை கொல்கத்தா அணி கடைசியாக ஏலத்தில் எடுத்தது.