ஐ.பி.எல் போட்டியில் புதிய சாதனை படைத்த தவான்!

Update: 2022-04-26 11:41 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங்க செய்த பஞ்சாப் அணி ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 88 ரன்களை எடுத்தும் விக்கெட்டாகாமல் இருந்தார்.

அதற்கு அடுத்து விளையாடி சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அம்பதி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறித்தது.

இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரராக கருதப்படும் ஷிர் தவான் புதிய அத்தியாயத்தா படைத்துள்ளார். அதே சமயத்தில் ஐபிஎல் போட்டியில் 199 இன்னிங்சில் மொத்தம் 6086 ரன்களை எடுத்துள்ளார். இதனால் 6 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெயரை எடுத்துள்ளார். விராட் கோலி 207 இன்னிங்சில் 6,402 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Malaimalar

Image Courtesy:India Tv 

Tags:    

Similar News