நீச்சல் போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கங்கள்!

Update: 2022-06-24 12:17 GMT

சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் மானா படேல் உள்ளிட்டோர் முறையே தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

இந்திய நீச்சல் வீரர்கள் மிஹிர் ஆம்ப்ரே 50 மீட்டர் பட்டர்ஃபிளை வென்றார். அதனை தொடர்ந்து அனீஷ் கவுடா 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் வென்றார். காமன்வெல்த் போட்டிக்கு முன்னரே நடைபெற்ற இப்போட்டியின் முதல் நாளில் இந்தியர்கள் மூன்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவா ஸ்ரீதர் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் 57.58 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தார். ஒரே நாளில் இந்திய நீச்சல் வீரர்கள் மூன்று தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இந்திய வீரர்கள் சாதனை படைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Source: News 18 Tamil

Image Courtesy: Ndtv

Tags:    

Similar News