வலுவான இங்கிலாந்து அணியை இன்று இரண்டாவது டி-20யில் சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.!

வலுவான இங்கிலாந்து அணியை இன்று இரண்டாவது டி-20யில் சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.!

Update: 2020-11-29 07:57 GMT

இங்கிலாந்து அணி தென் ஆப்பரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் டி-20 போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் பாப் டுப் ப்ளஸிஸ் மற்றும் குயிடன் டி காக் மற்றும் தூஷன் ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தென் ஆப்பிரிக்கா அணி 180 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் சாம் க்ர்ரன் மூன்று வீக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் சொதப்ப பேஸ்ரோ மட்டும் நிலைத்து விளையாடினார். 82 ரன்கள் அடித்து ஒரே வீரராக இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு பேஸ்ரோ கொண்டு செல்ல ஸ்டோக்ஸ் 31 ரன்கள் அடித்து அவருக்கு உதவ இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி-20 போட்டி பாரில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் தென் ஆப்பரிக்கா உள்ளது. 

Similar News