"கோலி விலகல்"டெஸ்ட் போட்டியில் ரிஷப்பண்டை கேப்டனாக நியமிக்க வேண்டும்: கவாஸ்கர்!

Update: 2022-01-17 12:39 GMT

இந்திய கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக ஜொலித்து வந்த நிலையில் அவர் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து புதிய கேப்டன் யார்? நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதனிடையே இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்டை கேப்டனாக நியமனம் செய்யலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி மேலும் அவர் கூறியதாவது: விராட் கோலிக்கு பின்னர் டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்டை தான் கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளது என்றார்.

Source: Maalaimalar

Image Courtesy:Crictoday

Tags:    

Similar News