வர்ணனையாளராக களள் காணும் ரெய்னா, ரவி சாஸ்திரி!

Update: 2022-03-16 11:13 GMT

இந்திய கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவரது ஆட்டத்துக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். அதே சமயம் கடந்த 2022 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்கவில்லை. இதனால் சிலர் ஐபிஎல் விட்டு விலகியும் சென்றனர். அதற்கு மாற்றாக ரெய்னாவை தேர்வு செய்யவில்லை.

மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் சிறந்த வர்ணனையாளரும் திகழ்ந்து வருகின்றார். அதே சமயம் கடந்த 2017ம் ஆண்டு முதல் வர்ணனையில் ஈடுபடவில்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், ரெய்னா மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இந்தி மொழியில் வர்ணனை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Aaj Tak

Tags:    

Similar News