இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் அசத்தலான சாதனை: வைரலாகும் கேப்டன் பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் பற்றி கேப்டன் ரோகித் சர்மா பதிவு இணையத்தில் வைரல்

Update: 2022-11-22 06:27 GMT

இந்தியாவில் அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சூழ்நிலை குறித்து 11 வருடங்களுக்கு முன்பே ரோகித் சர்மா போட்ட ஒரு பதிவு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டில் இந்திய அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்து இருக்கிறது. இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் சூரியகுமார் அதிரடி சதம். இந்தியாவின் 360 டிகிரி வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை சூரியகுமார் யாதவ் நிரூபித்து இருக்கிறார்.



 



டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களுக்கு ஏமாற்றிய போது, சூர்யகுமார் மட்டும் தனி ஆளாக வாணவேடிக்கை காட்டினார். சுமார் 51 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உள்ளிட்ட நூத்தி பதினோரு ரன்களை அணிக்காக பெற்று இருக்கிறார். அதுவும் அவர் விளையாடியது வீடியோ கேம் ஆடியது போல இருந்ததாக விராட் கோலி வியப்பில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் இது பற்றி கூறுகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா போட்ட ஒரு ட்விட்டர் பதிவுதான் தற்போது வைரலாக வருகிறது. அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சென்னையில் நடந்த பி.சி.சி.ஐ யின் விருது நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்துள்ளேன். சில அட்டகாச வீரர்கள் வர உள்ளார்கள். அதுவும் மும்பையில் இருந்து சூரியகுமார் என்று வீரர் எதிர்காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நட்சத்திரமாக திகழ திகழ்வார் என்று அவர் போட்டு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News