சூர்யகுமார் பகிர்ந்த வெற்றியின் ரகசியம் இதுதான்: கிரிக்கெட்டின் மிக சிறந்த டிப்ஸ்.!

இந்திய கிரிக்கெட் வீரரான சூர்யகுமார் தற்போது வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Update: 2023-01-08 23:31 GMT

கிரிக்கெட் அணியின் சூப்பர் ஹீரோவாக விளங்கும் சூரியகுமார் பல்வேறு ரகசியங்கள் குறித்து தன்னிடம் வைத்து இருக்கிறார். குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மூன்று முறை டி20 கிரிக்கெட் தொடரின் போது சதம் விளாசி அசத்தி இருக்கிறார். அது மட்டுமல்ல தொடக்க வீரர் அல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கூட வீரர்கள் சற்று தடுமாறினாலும், சூரியகுமார் மட்டும்தான் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை தேடி தந்து இருக்கிறார்.


மேலும் இவர் இந்த வெற்றியின் ரகசியம் என்ன? என்பது குறித்து இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் அளித்த பதில் தான் தற்போது பார்த்து இருக்கிறோம். நான் பயிற்சி செய்யும் பொழுது எனக்குள்ளே நான் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்வேன். வெறுமண பயிற்சி செய்வதற்கு பதில் நமக்கு நாமே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பயிற்சி செய்தால் போட்டியில் விளையாடும் போது நமக்கு சுலபமாக இருக்கும். இப்படி விளையாடுவதற்கு பின்னால் மிகப்பெரிய கடின உழைப்பு அடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இப்படி கடினமாக உழைத்தால் தான் இந்த ஒரு வெற்றியை சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார். தன்னுடைய பயிற்சிக் காலத்தில் போதும் நமக்கு முழு திருப்தி ஏற்படும் வகையில் நாம் ஒழிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மைதானத்தில் சுற்றளவை தெரிந்து கொண்டு எங்கு குறைவான தூரத்தில் பவுண்டரி இருக்கிறது. அந்த திசையை பார்த்து நான் ரன் அடிக்க முயற்சி செய்வேன். சில சமயத்தில் நான் விளையாடும் போது பந்து வீச்சாளர்கள் பந்தை வீசும் முன்னே யூகித்து விளையாடுவேன் என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News