ஆஸ்திரேலியா ஏதிரான டி -20 அணியில் வருண் பதிலாக தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வாய்ப்பு.!

ஆஸ்திரேலியா ஏதிரான டி -20 அணியில் வருண் பதிலாக தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வாய்ப்பு.!

Update: 2020-11-10 16:34 GMT

ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி -20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளது. அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. டி -20 தொடரில் பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதேபோல் டெஸ்ட் அணியும் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக எந்த அணியிலும் இடம் பெராமல் இருந்தார். தற்பொழுது கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதால் ரோஹித் சர்மாவிற்கு  டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழக வீரர் வருண் சக்கரவரத்தி ஆஸ்திரேலியா எதிரான டி -20 தொடரில் இடம் பெற்ற நிலையில் தற்பொழுது அவருக்கு இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார் இதனால் தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலியா தொடரில் இடம் கிடைத்துள்ளது.

Similar News