கிரிக்கெட்: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் இல்லை!

கிரிக்கெட்: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் இல்லை!

Update: 2021-01-06 18:06 GMT
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்க உள்ள இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு போட்டிகள் இரு அணிகளும் வெற்றி பெற்று உள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி நாளை தொடங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பட்ட ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றுள்ளார். அதே சமயம் தமிழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பட்டியிலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நந்திப் சைனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது தமிழக ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுக்மன் கில், அஜிங்கா ரஹனே, புஜாரா, வீஹாரி, பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சைனி, சீராஜ்.

Similar News