பெங்களூரு அணி வெற்றி பெறவில்லையே ! மைதானத்திலேயே கண்ணீர் விட்ட கோலி!

தற்போதைய ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதனிடையே அமீரகத்தில் நடைபெற்று வரும் பிற்பாதி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்த அறிவிப்பு அவரிடமிருந்து வந்தது.

Update: 2021-10-12 02:42 GMT

தற்போதைய ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதனிடையே அமீரகத்தில் நடைபெற்று வரும் பிற்பாதி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்த அறிவிப்பு அவரிடமிருந்து வந்தது.

இந்த முறை எப்படியும் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு பெங்களூர் அணியில் இருந்து விடைபெறலாம் என்று கோலி எண்ணியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பெங்களூர் அணியின் செயல்பாடும் இருந்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர் அணி. எலிமினேட்டரில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.


அப்போது எலிமினேட்டர் போட்டி முடிந்ததும் விராட் கோலி கண் கலங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அவருடன் சேர்ந்து டிவில்லியர்ஸும் கண் கலங்கிய காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், நான் விளையாடினால் அது பெங்களூர் அணிக்காக மட்டுமே என்று கூறியிருந்தார் கோலி. 139 ரன்கள் என்ற குறைந்த இலக்கையே நிர்ணயம் செய்திருந்தாலும், கடைசி வரை வெற்றிக்காக போராடினார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Cricket Times.Com


Tags:    

Similar News