ஜடேஜாவிற்கு பதிலாக இவர் விளையாடியது தான் எங்கள் தோல்விக்கு காரணம் பின்ச் காட்டம்.!

ஜடேஜாவிற்கு பதிலாக இவர் விளையாடியது தான் எங்கள் தோல்விக்கு காரணம் பின்ச் காட்டம்.!

Update: 2020-12-05 16:34 GMT

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் டி.20 போட்இன்நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிஆர்கி ஷாட் 34 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், பின்வரிசையில் களமிறங்கிய ஹென்ரிக்ஸை (30) தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது. 

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது : எனக்கு ஏற்பட்ட காயம் இந்த போட்டியை மோசமாக எடுத்துச் சென்றது. மேலும் ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியதும் மருத்துவர்கள் கண்கஷன் ரூல்ஸ் மூலம் சாஹலை இறக்கியது எங்களுக்குப் பாதகமாக அமைந்தது. இருப்பினும் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை ஆமோதிக்க முடியாது.

நாங்கள் முதல் பாதியில் பந்துவீசும் போது இறுதி நேரத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். சேசிங்கின் போதும் பவர்பிளே விற்கு பிறகு மிடில் ஓவர்களில் நிறைய பவுண்டரிகளை அடிக்கவில்லை அதுவும் தோல்விக்கு காரணம் என பின்ச் கருத்து.

Similar News