பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அடிக்கல்: பிசிசிஐ தலைவர் கங்குலி பங்கேற்பு!

Update: 2022-02-15 11:24 GMT

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக பெங்களூரு, தேவனஹள்ளியில் புதிதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (பிப்ரவரி 14) நடைபெற்றது.

இந்த விழாவில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இதில் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News