பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்! இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து!

பாராலிம்பிக் போட்டிகள் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-24 07:45 GMT

பாராலிம்பிக் போட்டிகள் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அதே போன்று இந்தியா சார்பாக 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.


இந்நிலையில், பாராலிம்பிக் போட்களில் பங்கேற்க உள்ள இந்திய அணியினருக்கு, கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எங்களை பெருமைப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்'' எனக் பதிவிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: The Tribune India

Tags:    

Similar News