கேப்டன் பதிவியில் இருந்து விலகுகிறாரா விராட் ? ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய டிவிட்டர் பதிவு !

Cricket News.

Update: 2021-09-16 23:30 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய செல்பாடுகள் குறித்து விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில் தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் டிவிட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் வேலைபளு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிந்துள்ளேன். கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். இதில், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக கேப்டனாக எனது முழு பங்களிப்பை அளித்துள்ளேன்.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை வழி நடத்த எனக்கு நேரம் தேவைபடுகிறது. இதனால் துபாய் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை யுடன் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் பேஸ்ட்மேனாக எனது பங்களிப்பை அணிக்கு முழுமையாக கொடுப்பேன் எனவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. கேப்டனை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கபடவில்லை.விராட்கோலியே அனைத்து விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பார் எனவும் கூறியுள்ளது

Source: Malaimalar

Tags:    

Similar News