சென்னையில் மாநில மகளிர் கைப்பந்து போட்டி நாளை முதல் தொடக்கம்!

Update: 2022-04-13 13:32 GMT

எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மற்றும் ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன் மற்றும் லேடி சிவகாமி அய்யர் பள்ளி உள்ளிட்டவை இணைந்து மாநில அளவிலான மகளிர் அழைப்பு கைப்பந்து போட்டியை சென்னையில் நடத்த உள்ளது.

இதில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டி மைலாப்பூரில் உள்ள லேடி சிவகாமி பள்ளியில் நாளை முதல் (ஏப்ரல் 14) தொடங்க உள்ளது. இப்போட்டியானது ஏப்ரல் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

மொத்தம் பெண்கள் பிரிவில் 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்கிறது. லீக் மற்றும் நாக்அவுட் முறையிலான போட்டி நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News