உலக ஜூனியர் பளுத்தூக்கும் போட்டி - இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பு!

Update: 2022-05-04 11:45 GMT

கிரீஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் பளுத்தூக்குதல் போட்டியில் இரண்டாவது நாளில் நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனைகளான ஞானேஸ்வரி யாதவ், 73 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 83 கிலோ என்று மொத்தமாக 156 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

மேலும், மற்றொரு இந்திய வீராங்கனையான ரித்திகா மொத்தம் 150 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்றார். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான இந்தோனேஷியாவின் வின்டி கான்டிகா அய்சா மொத்தம் 185 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இந்தியா இதுவரையில் 3 பதக்கம் வென்றுள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News