மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது புதிய புத்துணர்ச்சி தந்தது - வீராட் கோலி.!

மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது புதிய புத்துணர்ச்சி தந்தது - வீராட் கோலி.!

Update: 2020-12-03 14:51 GMT

இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வென்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தவன் 16 ரன்னிலும் கில் 33 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீராட் கோலி 63 ரன்கள் அடித்து அவுட் ஆக அதன் பின்னர் களம் ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்னிலும் கே.எல் ராகுல் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க ஹர்டிக் பாண்டியா 92 ரன்களும் ஜடேஜா 66 ரன்களும் அடிக்க இந்திய அணி 302-5 ரன்கள் சேர்த்தனர்.  

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் பின்ச் 75 ரன்களும் மேக்ஸ்வெல் 59 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க இந்திய அணி பேராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. ஆட்டநாயகனாக ஹர்டிக் பாண்டியாவும் தொடர் நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : முதல் பாதியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தோம். ஆனால் இரண்டாவது பாதியின் போது ஆட்டம் மாறியது. கில் மற்றும் இதர புதிய வீரர்கள் அணிக்குள் வரும்போது அது ஒரு புத்துணர்ச்சியை தந்தது. இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு நிறைவே ஒத்துழைத்தது என்று கூறவேண்டும்.

எங்களுடைய நம்பிக்கையும் இந்த போட்டியின் மூலம் அதிகரித்துள்ளது. இன்டர்நேஷனல் கிரிக்கெட்டை நீண்டகாலமாக விளையாடும்போது இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு தான் மீண்டு வர வேண்டும்.

Similar News