உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: பங்கேற்க தயாராகும் இந்திய வீரர்கள்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் லண்டன் சென்று இருக்கிறார்கள்.

Update: 2023-05-24 00:15 GMT

இந்தியாவை பொருத்தவரை தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிளே ஆப் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டு ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணி சிறப்பாக தயாராகி வருகிறது.


அந்த வகையில் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. இதன்படி முதற்கட்டமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கின்ற காரணத்தால் அந்த அணியில் அங்கம் வகித்த இந்திய வீரர்கள் விராட் கோலி, சிராஜ் ஆகியோர் லண்டன் புறப்பட்டு சென்று இருக்கிறார்கள்.


அதை போல் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், அக்சர் படேல், ஆல்ரவுண்டர் தாகூர் ஆகியோரும் லண்டன் சுற்று இருக்கிறார்கள். IPL கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் கேப்டன் ரோகித் கிஷான் சுமன் கில், முகமது ஷமி, பரத் ஆகியோர் தங்களுக்குரிய ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு லண்டன் செல்வார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அங்கு தற்போது இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News