இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர் திடீர் பாய்ச்சல் ஏன்?

Update: 2022-07-12 08:25 GMT

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாட இருக்கிறது.

அதன்படி இதில் 20 ஓவர் போட்டி தொடரில் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட உள்ளார். இதற்கிடையில் 20 ஓவர் போட்டியிலும் ஓய்வு அளிக்கும்படி விராட் கோலி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூத்த வீரர்கள் ஓய்வு எடுப்பதற்கு முன்பே கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி அடைந்துள்ளார். அதே போன்று மூத்த வீரர்கள் ஓய்வு எடுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தற்போது இந்தியாவுக்காக விளையாட உள்ளீர்கள். ஐ.பி.எல்., போட்டியின்போது ஓய்வு எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்காக விளையாடும்போது ஓய்வு எடுக்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஓய்வு பற்றி பேசாமல் உடனடியாக இந்தியாவுக்காக விளையாடுங்கள் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News