வைகை ஆற்றில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

வைகை ஆற்றில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

Update: 2020-12-07 17:42 GMT

மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த முருகன், முத்து தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்களான சுஜி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளதாக தெரிகிறது.


இதனையடுத்து நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமிகளை தேடியபோது, சிறுமிகளின் உடல் ஆரப்பாளையம் மற்றும் எல்.ஐ.சி பாலம் அருகே சடலமாக மிதந்து கொண்டிருந்தது.


இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் இரண்டு பேரின் உடலையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இது பற்றி கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News