5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி.. புதிய கடையில் குவிந்த மக்கள் கூட்டம்.!

5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி.. புதிய கடையில் குவிந்த மக்கள் கூட்டம்.!

Update: 2020-11-30 11:36 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதியதாக கோழி கறக்கடை திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழா சலுகையாக 5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.


அனைவருமே கைகளில் 5 பைசா நாணயத்துடன் குவிந்துள்ளனர். இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.


இது பற்றி அந்த கடையின் உரிமையாளர் இது பற்றி கூறியதாவது: பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரிடம் மட்டுமே 5 பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களிடம் நாணயம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செயல் இன்னும் மக்கள் பழமை மாறாமல் உள்ளதை காட்டுவதாக கடையின் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
 

Similar News