பந்த்.. வேணாம்.. போடா.. ட்விட்டரில் டிரெண்டிங்.!

பந்த்.. வேணாம்.. போடா.. ட்விட்டரில் டிரெண்டிங்.!

Update: 2020-12-08 08:19 GMT

பஞ்சாப் மாநில விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்காக எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதற்காக பாஜக ஆளுகின்ற மாநிலங்களை தவிர ஒரு சில மாநிலங்களில் முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிகிறது. அதுவும் அந்த மாநில விவசாயிகள் ஆதரவு அளிக்கவில்லை என்ற செய்திகளே தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. ஆனால் தமிழகத்தில் திட்டமிட்டபடி பேருந்து சேவைகள், ரயில் சேவைகள் என அனைத்தும் இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் பந்த் வேணா போடா என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் போலி போராளிகளை நம்ப தயாராக வில்லை என்றே தெரிகிறது.
 

Similar News