மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் பிறந்த நாள் விழா கோலாகலம்.!
மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் பிறந்த நாள் விழா கோலாகலம்.!
மகாகவி பாரதியார் படித்த நெல்லை சந்திப்பு மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழா மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையான நாற்றங்காலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் தளவாய் திருமலையப்பன் தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்தவர்களை ஓவிய ஆசிரியர் மு.சொக்கலிங்கம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர், பள்ளி முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பாரதியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பாரதியார் படித்த வகுப்பறையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கல்வி அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.