திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமியை தட்டி தூக்கிய போலீஸ்.!

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமியை தட்டி தூக்கிய போலீஸ்.!

Update: 2020-12-10 13:04 GMT

தமிழகத்தில் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அரசியல் பிரமுகர்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. சென்னையில் முன்னணி நடிகர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகும்.

மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்துவார்கள், அப்போது அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பார், அல்லது பள்ளி மாணவர்களாக இருப்பார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்து போலீசார் விடுவிக்கும் காட்சிகளும் அரங்கேறும்.

இந்நிலையில், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மது போதையில் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆனந்த் என்பரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தெரியாமல் பேசி விட்டேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
 

Similar News