பொள்ளாச்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.!

பொள்ளாச்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.!

Update: 2020-12-04 16:32 GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை, மற்றும் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வது போன்றவைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.


மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக கடந்த மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, பகுதிகளுக்கான பூத் கமிட்டி ஏஜெண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல், கிணத்துக்கடவு வட்டாச்சியர் ஸ்ரீதேவி, ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம், வால்பாறை வட்டாச்சியர் ராஜா, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News