டிசம்பரில் இந்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!
டிசம்பரில் இந்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.