தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!

Update: 2020-12-09 08:37 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய அல்லது லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே போன்று சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் இடி அல்லது மின்னலுடன் மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் 7 செ.மீ, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கடலூரில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பொம்மிடி, அரூர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Similar News