தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Update: 2020-12-08 09:57 GMT

தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் சேத விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலை கொண்டிருந்தது.

இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று (செவ்வாய்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News