சென்னை: காவல் நிலையம் அருகே தி.மு.க. பேச்சாளர் வெட்டிக்கொலை!

சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Update: 2021-08-19 05:42 GMT

சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை, அண்ணாநகர் காவல் நிலையம் அருகே நேற்று இரவு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் கொலை செய்யப்பட்டு இருந்த நபரின் உடலை பிரேத பரிசோதைனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கீழ்ப்பாக்கம், அடுத்துள்ள டிபி சத்திரம் 16வது குறுக்கு தெருவை சேர்ந்த சம்பத்குமார் 48, என்பது தெரியவந்தது. அவர் திமுக பேச்சாளர் என்பதும் தெரியவந்தது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/113338/Tata-Motors-unveils-Tigor-EV-sales-to-begin-from-August-31.html

Tags:    

Similar News