சென்னை ஈ.சி.ஆர். சாலையில் 200 பேர் திடீர் சாலை மறியல்.!

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் 200 பேர் திடீர் சாலை மறியல்.!

Update: 2020-12-01 15:07 GMT

சென்னை ஈ.சி.ஆர்.சாலையின் அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பு அருகில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சுமார் 100க்கும் அதிகமான குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.


திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வருவாய்த்துறையினர் குடியிருப்புவாசிகள் அனைவரும் வெளியேறி செல்லும்படி கூறிவிட்டு அங்கே ஒரு பெயர் பலகையும் வைத்து விட்டு சென்றுள்ளனர். இந்த அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மேலக்கோட்டையூர் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்கள் வண்டலூர், கேளம்பாக்கம் செல்லும் சாலையில், சாலையின் இருபுறமும் அமர்ந்து சுமார் 200க்கும் அதிகமானோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.


இது பற்றி தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானத்தை ஏற்ற பின்னரே சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.
 

Similar News