சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம்.. ஜனாதிபதி ஒப்புதல்.!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம்.. ஜனாதிபதி ஒப்புதல்.!

Update: 2020-12-01 19:54 GMT

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் கண்ணம்மாள், சாந்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா ராமராஜூ, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். 


மேலும், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் ஆகியோரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.


இதனால் உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக தற்போது உயர்ந்துள்ளது. இன்னும் 12 காலியிடங்கள் உள்ளது.
 

Similar News