கேள்வி கேட்டவரின் குடும்ப படத்தை வெளியிட்டு மிரட்டும் தி.மு.க எம்.பி செந்தில் குமார் - அடிப்படை நாகரீகமே தெரியாதா? பொதுமக்கள் காட்டம்!

Update: 2022-07-13 09:12 GMT

டிவிட்டரில் அதிமுக தலைமை குறித்து திமுக எம்பி செந்தில் குமார் அவதூறாக பதிவிட்டு இருந்தார். அதற்கு அழகம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கிருஷ்ணா எதிர்கருத்து தெரிவித்திருந்தார். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாத எம்பி செந்தில் குமார், கிருஷ்ணாவின் குடும்ப படத்தை பதிவிட்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். எம்.பியின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

பதில் கருத்து சொல்லுங்கள், உண்மையெனில் அது நின்று பேசும், அடுத்தவர் குடும்ப போட்டோ பதிவிடுவது ஒரு MP செய்யுற வேலை இல்லை… உங்களை நம்பிக்கையுடன் பார்த்தேன், அனைத்தும் மாயை என்று தெரியவைத்துவிட்டீர்கள் என ஒருவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் பேசியதும் தவறு இவர் அவரது மனைவியின் புகைப்படத்துடன் பதிவிட்டதும் தவறு பொறுப்பில் உள்ள பாராளுமன்றஉறுப்பினர் இவ்வாறு பதில் பதிவு செய்வது அழகல்ல. வாய்க்கு வந்ததை எல்லாம் பதிவது ஏற்புடையது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும் இருவரும் தங்கள் பதிவுகளை நீக்குவது நல்லது எனவும் கூறியுள்ளனர். 

Input From: Twitter 


Similar News