பிச்சை எடுப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் ஒருவர் கொலை.!

பிச்சை எடுப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் ஒருவர் கொலை.!

Update: 2020-12-01 18:59 GMT

நாகர்கோவிலில் பிச்சை எடுப்பதில் தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் பிச்சை எடுத்து வருகின்றனர். வடசேரி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையங்களில் இவர்கள் இரவில் தங்குவது வாடிக்கை.


இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் பிச்சை எடுக்கும் பகுதியல் தமிழ்நாட்டை சேர்ந்த மற்றொருவரும் பிச்சை எடுத்து வந்துள்ளார். ஏற்கனவே பிச்சை எடுக்கும் தெருக்கள் பிரிப்பதில் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தை சேர்ந்தவர் கிறிஸ்தவ கல்லூரி அமைந்த பகுதிக்கு முதலில் போய் பிச்சை எடுத்து விடுகிறார். இதனால் ஜார்கண்ட் பிச்சைகாரருக்கு வருவாய் குறைவாகவே வந்துள்ளது.


இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று அந்த பகுதியிலுள்ள பகுதியில் தமிழகத்தை சேர்ந்தவர் பிச்சை எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜார்கண்ட் பிச்சைக்காரர் தமிழகத்தை சேர்ந்தவரை கட்டையால் தாக்கியுள்ளார்.


இதனால் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அப்போது சுற்றியும் மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். இருவரையும் தடுக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Similar News