வீடியோ வெளியிட்டு மிரட்டிய முன்னாள் நீதிபதி கர்ணன்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்.!

வீடியோ வெளியிட்டு மிரட்டிய முன்னாள் நீதிபதி கர்ணன்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்.!

Update: 2020-12-02 15:38 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர் கர்ணன், இவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை தினமும் விமர்சனம் செய்து வருகிறார். இவருக்கு பல முறை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தும் திருந்தியபாடில்லை. இதற்கு முன்னர் கொல்கத்தா போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற பணியாளர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் வசித்து வருகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார் இன்று கைது செய்தனர். நீதிபதிகள் குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இவர் மீண்டும் மீண்டும் இந்த குற்ற சம்பவத்தை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News