மீண்டும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

மீண்டும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

Update: 2020-12-07 16:50 GMT

தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற் ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது. அடுத்தடுத்த புயல்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் அநேக இடங்களில மிதமானது வரையில் மழை பெய்யும்.
அதே போன்று சென்னை உள்ளிட்ட பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Similar News